கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

மதத்தை மறந்த மனிதன்

மதத்தின் ஒளி இதயத்தில் பிரகாசித்ததே 
மனிதன் பாதை தெளிந்தே தெரிந்ததே 
ஆனாலின்று அவன் நம்பிக்கை சரிந்ததே 
மாயையின் நிழல் முன்னாடி விரிந்ததே 

அறிவின் உயரம் தொட்டே சிறந்தான் 
ஆன்மாவின் ஆழம் குறைந்ததை மறந்தான் 
உறவுகள் எல்லாம் விலகி நிற்கின்றது 
தனிமைக்குள் அவன் வாழ்க்கை தத்தளிக்கின்றது 

பொன் குவித்தான், புகழ் தேடினான்
பொய்யான சிரிப்பில் வாழ்க்கையை அமைத்தான் 
மன்னிப்பு என்பதை அடியோடு மறந்தான் 
கடினமாக மனத்தை மனிதன் மாற்றிவிட்டான் 

மதத்தை மறந்த மனிதன் கூட
மறுபடியும் ஒளியை காணலாம்
ஒரு சிறு அன்பு செயல் போதும்
அன்றோடு வாழ்க்கை புதியதாகும் 

நின்று சிந்தி நான் யாரென
உன்னையே நீ கேள்
இறைவனை அறிவாய்

ஜெயம்
16-04-2026

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading