28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ….கனவுப்பயணம்….. 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின் நதியில்நீந்தி
ஏற்றமுற காகிதத் தோணியில் மிதந்து
சொற்களின் வேட்டையைத் தேடியபடி
மைகடந்து பயணிக்கிறது என்கனவுப்பயணம் !
அகராதிக்குள் சிக்காத சொற்களைத்தேடி
அர்த்தங்கள் புதைந்த மெளனத்தைநாடி
அலைகிறது எனது எழுதுகோல்
மேகத்திடம் கொஞ்சம் வண்ணத்தையும்
வெண்நிலாவிடம் சொற்ப வெண்மையையும்
மண்டியிட்டு கேட்டு தொடர்கிறது என்கனவுப்பயணம் !
காலம் ஒருகண்ணாடியாகிட
கண்ணாடியின் அழுக்கைத் துடைக்கும் தூரிகையாக
என்கவிகள் அமைந்திடுமே
அடக்குமுறைகள் வெடித்திடும்போது
அமைதி காக்காது மெளனத்தை உடைத்து
சமூகத்தின் குரலாக முழங்குவதே
சுமூகமான என்இலட்சியக் கனவுப்பயணம் !
Author: ரஜனி அன்ரன்
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...