” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ….கனவுப்பயணம்….. 07.05.2026

கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின் நதியில்நீந்தி
ஏற்றமுற காகிதத் தோணியில் மிதந்து
சொற்களின் வேட்டையைத் தேடியபடி
மைகடந்து பயணிக்கிறது என்கனவுப்பயணம் !

அகராதிக்குள் சிக்காத சொற்களைத்தேடி
அர்த்தங்கள் புதைந்த மெளனத்தைநாடி
அலைகிறது எனது எழுதுகோல்
மேகத்திடம் கொஞ்சம் வண்ணத்தையும்
வெண்நிலாவிடம் சொற்ப வெண்மையையும்
மண்டியிட்டு கேட்டு தொடர்கிறது என்கனவுப்பயணம் !

காலம் ஒருகண்ணாடியாகிட
கண்ணாடியின் அழுக்கைத் துடைக்கும் தூரிகையாக
என்கவிகள் அமைந்திடுமே
அடக்குமுறைகள் வெடித்திடும்போது
அமைதி காக்காது மெளனத்தை உடைத்து
சமூகத்தின் குரலாக முழங்குவதே
சுமூகமான என்இலட்சியக் கனவுப்பயணம் !