கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ….கனவுப்பயணம்….. 07.05.2026

கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின் நதியில்நீந்தி
ஏற்றமுற காகிதத் தோணியில் மிதந்து
சொற்களின் வேட்டையைத் தேடியபடி
மைகடந்து பயணிக்கிறது என்கனவுப்பயணம் !

அகராதிக்குள் சிக்காத சொற்களைத்தேடி
அர்த்தங்கள் புதைந்த மெளனத்தைநாடி
அலைகிறது எனது எழுதுகோல்
மேகத்திடம் கொஞ்சம் வண்ணத்தையும்
வெண்நிலாவிடம் சொற்ப வெண்மையையும்
மண்டியிட்டு கேட்டு தொடர்கிறது என்கனவுப்பயணம் !

காலம் ஒருகண்ணாடியாகிட
கண்ணாடியின் அழுக்கைத் துடைக்கும் தூரிகையாக
என்கவிகள் அமைந்திடுமே
அடக்குமுறைகள் வெடித்திடும்போது
அமைதி காக்காது மெளனத்தை உடைத்து
சமூகத்தின் குரலாக முழங்குவதே
சுமூகமான என்இலட்சியக் கனவுப்பயணம் !

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading