கனவுப் பயணம்

ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப் பயணம் காசினியில் தொடர்கின்றது
நின்றுவிடாதே செல்லென நிற்காமல் நகர்கின்றது

லட்சியத்தை அடைய திறந்திட்ட பாதை
சூழ்ந்தாலும் இருள் விடியலை தேடி
இலக்கை அடைவது மட்டுமல்ல வெற்றி
நின்றுவிடாத தொடர்க்கையில் எழுச்சியில் மகிழ்ச்சி

ஆசைகளின் வழிநடத்தலில் மனிதனின் வாழ்வு
அது இல்லையென்றால் இவ்வுலகமே வெறுமை
கனவோடு கலந்த வாழ்க்கை இயங்கட்டும்
உண்மை வாழ்க்கையின் அர்த்தம் மலரட்டும்

ஜெயம்
06-05-2026

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading