” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக் கவருகின்ற காட்சி
பட்டாம் பூச்சிகள் சிறகடித்துப் பறக்கும் காட்சி
பட்டப்பகலில் வெட்டவெளியில்
சுட்டெரிக்கும் சூரியக்கதிர்கள்
தகதகவென மிருதங்க
வாய்க்காலில் வழிந்தோடும்
நீரில் கால்கள் நனைக்க ஜில்லென்ற குளிரில் தேகம் புல்லரிக்க……..
பயணம் தொடர்கிறது
தேசம் நோக்கி!
காலம் கடந்த பாதையில்
நினைவுகளின் சுவடுகள்
நிஜத்தை வரவழைக்க
நிழலாய் மனத்தில் ஊஞ்சலாடும்
வண்ணக் கனவுகள்…….
ஒரே கூட்டில்….
ஒரே விறாந்தையில்….
ஒரே சமையல்……
ஒரே கும்மாளம்…..
மறைந்துபோன உறவுகள் மனத்தினை நிறைக்க
விழிகள் மறுத்தன தூக்கத்தை
பயணிக்கின்றேன் நான் தொலைதூரம்!

கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு நன்றி.
திரு.திருமதி. நடா மோகனுக்கு நன்றி.
அனைத்துக் கவிப் படைப்பாளர்கட்கும் பாராட்டுகள்!