கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக் கவருகின்ற காட்சி
பட்டாம் பூச்சிகள் சிறகடித்துப் பறக்கும் காட்சி
பட்டப்பகலில் வெட்டவெளியில்
சுட்டெரிக்கும் சூரியக்கதிர்கள்
தகதகவென மிருதங்க
வாய்க்காலில் வழிந்தோடும்
நீரில் கால்கள் நனைக்க ஜில்லென்ற குளிரில் தேகம் புல்லரிக்க……..
பயணம் தொடர்கிறது
தேசம் நோக்கி!
காலம் கடந்த பாதையில்
நினைவுகளின் சுவடுகள்
நிஜத்தை வரவழைக்க
நிழலாய் மனத்தில் ஊஞ்சலாடும்
வண்ணக் கனவுகள்…….
ஒரே கூட்டில்….
ஒரே விறாந்தையில்….
ஒரே சமையல்……
ஒரே கும்மாளம்…..
மறைந்துபோன உறவுகள் மனத்தினை நிறைக்க
விழிகள் மறுத்தன தூக்கத்தை
பயணிக்கின்றேன் நான் தொலைதூரம்!

கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு நன்றி.
திரு.திருமதி. நடா மோகனுக்கு நன்றி.
அனைத்துக் கவிப் படைப்பாளர்கட்கும் பாராட்டுகள்!

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading