மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

குருதிப்புனல்

கந்தகக் குண்டு வீச்சால்
கழன்று போனது எம்மவர் மூச்சு
அந்தரத்தில் பறந்து சிதறிய அங்கங்கள்
சிந்திய குருதிப் புனலால்
சிவந்தது முள்ளி வாய்க்கால்

மரணித்த தாயின் மார்பினைச்
சப்பிய மழலை சுவைத்தது குருதிப்புனலை
மரணத்தில் தப்பியவரும்
அப்பினார் இதுகண்டு அனலை

அற்பருக்கு இதுவெல்லாம் அங்கதம்
அல்லல்பட்ட எம்மையோ எடுக்கவைத்தது சங்கற்பம்

எஞ்சியவர் சொன்ன கதைகள்
தஞ்சத்தில் பெற்ற வதைகள்
அஞ்சி வாழும் வாழ்க்கை
நெஞ்சில் கொட்டும் நெருப்பை

இனவாதம் தானே துப்பியது குருதிப்புனலை
கனவிலும் நினைத்தோமா இதனை

சனநாயகம் செத்தால்
சங்கடமே உச்சம்
சாட்சியெனவே நிற்கின்றோம் நாமும்
கண்ணீரோடு நித்தம்

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading