” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

குருதிப்புனல்

கந்தகக் குண்டு வீச்சால்
கழன்று போனது எம்மவர் மூச்சு
அந்தரத்தில் பறந்து சிதறிய அங்கங்கள்
சிந்திய குருதிப் புனலால்
சிவந்தது முள்ளி வாய்க்கால்

மரணித்த தாயின் மார்பினைச்
சப்பிய மழலை சுவைத்தது குருதிப்புனலை
மரணத்தில் தப்பியவரும்
அப்பினார் இதுகண்டு அனலை

அற்பருக்கு இதுவெல்லாம் அங்கதம்
அல்லல்பட்ட எம்மையோ எடுக்கவைத்தது சங்கற்பம்

எஞ்சியவர் சொன்ன கதைகள்
தஞ்சத்தில் பெற்ற வதைகள்
அஞ்சி வாழும் வாழ்க்கை
நெஞ்சில் கொட்டும் நெருப்பை

இனவாதம் தானே துப்பியது குருதிப்புனலை
கனவிலும் நினைத்தோமா இதனை

சனநாயகம் செத்தால்
சங்கடமே உச்சம்
சாட்சியெனவே நிற்கின்றோம் நாமும்
கண்ணீரோடு நித்தம்

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan