15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
மனோகரி ஜெகதீஸ்வரன்
விருப்பத் தலைப்பு
பஞ்சம் பழிபற்றிச் சூழ
நெஞ்சம் அஞ்சித் துவள
கெஞ்சிக் கூனி கூத்தாடிக்
காத்தாடியாகி
நடுநடுங்கி நாச்சுருண்டு வாழவோ
உன்மடி தவழ்ந்தோம் அன்னையே
தளிரும் மலரும் காயும்
கனியும் மணியும் முத்தும்
நெல்லும் குவிந்த புலத்தில்
குருதி புகுந்தது ஏனம்மா
உறுதி குலைந்ததும் ஏனம்மா
கருகிய உடல்கள் குவிந்ததுமேனம்மா
கண்ணியம் காணாது போனதுமேனம்மா
நீயூட்டிய பாலில் பேதமுண்டோ தாயே
இனமதமொழிச் சாயமுண்டோ தாயே
நாம்காயம் கண்டதற்கு
காரணமென்ன தாயே
காட்சிச் சாட்சிச் திரிபுகளுக்கும் காரணமென்ன தாயே
சூழ்ச்சி வலையில் சீக்கினையோ
ஆட்சி இழந்ததோ உந்தன் அன்பு
வாயே திறவா உந்தன் மௌனம்
தாயே உனக்கு தகுமோ?
சேயே நாமுனக்கு
சோதியில் கலக்கும் வரைக்கும்
தங்கித் தன்மானத்துடன் வாழத் தாதரை
ஏங்கி வதங்கா முறை
மனோகரி ஜெகதீஸ்வரன்.

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...