மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

விருப்பத் தலைப்பு

பஞ்சம் பழிபற்றிச் சூழ
நெஞ்சம் அஞ்சித் துவள
கெஞ்சிக் கூனி கூத்தாடிக்
காத்தாடியாகி
நடுநடுங்கி நாச்சுருண்டு வாழவோ
உன்மடி தவழ்ந்தோம் அன்னையே

தளிரும் மலரும் காயும்
கனியும் மணியும் முத்தும்
நெல்லும் குவிந்த புலத்தில்
குருதி புகுந்தது ஏனம்மா
உறுதி குலைந்ததும் ஏனம்மா
கருகிய உடல்கள் குவிந்ததுமேனம்மா
கண்ணியம் காணாது போனதுமேனம்மா

நீயூட்டிய பாலில் பேதமுண்டோ தாயே
இனமதமொழிச் சாயமுண்டோ தாயே

நாம்காயம் கண்டதற்கு
காரணமென்ன தாயே
காட்சிச் சாட்சிச் திரிபுகளுக்கும் காரணமென்ன தாயே
சூழ்ச்சி வலையில் சீக்கினையோ
ஆட்சி இழந்ததோ உந்தன் அன்பு

வாயே திறவா உந்தன் மௌனம்
தாயே உனக்கு தகுமோ?
சேயே நாமுனக்கு
சோதியில் கலக்கும் வரைக்கும்

தங்கித் தன்மானத்துடன் வாழத் தாதரை
ஏங்கி வதங்கா முறை

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan