பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

மாற்றம்

மாறுபடும் நிலையே மாற்றம்
ஊறுதரும் சிலமாற்றம்
உய்வுதரும் பலமாற்றம்

சாதக மாற்றம் தரும் ஏற்றம்
பாதக மாற்றம் தரும்
ஏமாற்றம்

முன்னைய மாற்றத்தாலே
அதுதந்த ஏமாற்றத்தாலே
இன்னமும்
நடக்கின்றோம்
உபத்திரவச் சாலையில்
ஊனவுணர்வுகளோடு
உடற்கூடு காவி

எச்சங்களைப் பேணும்
எங்களது ஆசை
உச்சத்தில் இருப்பதாலேயே
ஊமைகளாய் கடக்கின்றோம்
அச்சத்தை மறைக்கவே
ஒப்புக்காய் சிரிக்கின்றோம்
கொச்சைப் பேச்சுக்களைக்
கொசுவத்தில் கொழுவாது
இச்சை யடக்கி
இதயத்தை இறுக்கின்றோம்
பிச்சைகளை ஏற்றும்
பிஞ்சுகளைக் காக்கின்றோம்

கூச்சலிட்டு என்ன பயன்?
கும்மிருட்டு அகலவா போகிறது
ஆச்சரியம் நிகழின்
அனைத்தும் மாறும்
பாதகம் கழுவேறும்
சாதகம் அரங்கேறும்

முப்பொழுதும் வேண்டித் துதிக்கின்றேன்
எப்போது வருமது சொல்லுங்கள்
அப்போதே பூச்சொரியும் என்பாக்கள்
தப்பேதும் சொல்லாதீர்கள்
அதுவரை மௌனமே எனதுமொழி

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan