மனோகரி ஜெகதீஸ்வரன்

ஈரம்

கண்ணில் தோன்றும் ஈரம்
காட்டும் நெஞ்சின் பாரம்
மண்ணில் சுவறும் ஈரம்
தீட்டும் பசுமைக் கோலம்
விண்ணைத் தழுவும் ஈரம்
வீழும் மழையாய் பாரும்

மனதில் புகும் ஈரம்
மகிழப் பொழியும் அருளை
உனதெனது என்னும் வீம்பு
உருவாகின் உண்டாக்கும் இருளை

உன்னில் என்னில் உண்டு ஈரம்
உருகியுதவி வாழ்வதே அதனது சாரம்

ஈரமில்லா மனிதர் வாழ்வது
பூமிக்குப் பாரம்
இதனை அறிந்து
இயங்கார்
பிறரிதயத்தில் தரியார்

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading