” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

ஈரம்

கண்ணில் தோன்றும் ஈரம்
காட்டும் நெஞ்சின் பாரம்
மண்ணில் சுவறும் ஈரம்
தீட்டும் பசுமைக் கோலம்
விண்ணைத் தழுவும் ஈரம்
வீழும் மழையாய் பாரும்

மனதில் புகும் ஈரம்
மகிழப் பொழியும் அருளை
உனதெனது என்னும் வீம்பு
உருவாகின் உண்டாக்கும் இருளை

உன்னில் என்னில் உண்டு ஈரம்
உருகியுதவி வாழ்வதே அதனது சாரம்

ஈரமில்லா மனிதர் வாழ்வது
பூமிக்குப் பாரம்
இதனை அறிந்து
இயங்கார்
பிறரிதயத்தில் தரியார்

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan