29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
பங்கு நீ
வந்தாய் மனை எந்தன் பாகமாய்
தந்தாய் தந்தையெனும் பதம் வேகமாய்
நொந்தாய் எமக்காய் தினம்தினம்
பந்தினைப் போன்றே சுழன்று உழன்று
பொங்கி மங்களம் பூமெத்தையிட நீயே காரணி
பொசுங்கித் தீதுகள் மாய்ந்திட நீயே காரணி
தங்கும் வளத்துக்கும் தாரம் நீயே காரணி
மங்கா சுகத்துக்கும் நீயே நிவாரணி
தந்தாய் நீயெனக்குத்
தலைமையணி
தலைதாழ்ந்து நிற்கின்றது வசவுமொழி
எந்நாளும் தருவேன் இசைவுமொழி
நீயே எந்தன் வாழ்விணொளி
மனோகரி ஜெகதீஸ்வரன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.