மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

பங்கு நீ

வந்தாய் மனை எந்தன் பாகமாய்
தந்தாய் தந்தையெனும் பதம் வேகமாய்
நொந்தாய் எமக்காய் தினம்தினம்
பந்தினைப் போன்றே சுழன்று உழன்று

பொங்கி மங்களம் பூமெத்தையிட நீயே காரணி
பொசுங்கித் தீதுகள் மாய்ந்திட நீயே காரணி
தங்கும் வளத்துக்கும் தாரம் நீயே காரணி
மங்கா சுகத்துக்கும் நீயே நிவாரணி
தந்தாய் நீயெனக்குத்
தலைமையணி
தலைதாழ்ந்து நிற்கின்றது வசவுமொழி
எந்நாளும் தருவேன் இசைவுமொழி
நீயே எந்தன் வாழ்விணொளி

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading