“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மாதவமே உந்தனை

கெங்கா ஸ்ரான்லி

மாதவமே உந்தனை
மனமார நினைத்தவண்ணம்
சாதனைகள் பலசெய்து
சரித்திரம் படைத்துவிட்டீரே
கோதண்ட ராமனைப்போல்
களத்தில் நின்றபடி
சாதரணசெயலாய் நினைத்து
சந்தடி இன்றியே சென்றுவிட்டீர்
குண்டுகள் போட்டுத் தகர்த்தாலும்
குனிந்து நிற்காது நிமிர்ந்து நின்று
வென்று களமாடியவரே
உந்தனை என்னவென்று வியந்து
போற்றுவோம்
தாய்மண் மீட்பிற்காய்
தம்முயிரை ஈந்த செல்வங்களே
சுயநலமில்லா தெய்வீக சேவை
எமைக்காக்கும்் அரண்களாக
மாறுபட்ட நிலையிலும்
மறுக்காது காத்தீரே
வீறுகொண்டு எழுந்த
வீரவேங்கைகளை
காலமெலாம் நினைத்து
அஞ்சலிப்போம் ஆராதிப்போம்
அனுதினமும் உம்நாம்ம்
மாதவமே உந்தனையே
ஆயுள் உள்ளவரை.!

Nada Mohan
Author: Nada Mohan