மாதவமே உந்தனை

கெங்கா ஸ்ரான்லி

மாதவமே உந்தனை
மனமார நினைத்தவண்ணம்
சாதனைகள் பலசெய்து
சரித்திரம் படைத்துவிட்டீரே
கோதண்ட ராமனைப்போல்
களத்தில் நின்றபடி
சாதரணசெயலாய் நினைத்து
சந்தடி இன்றியே சென்றுவிட்டீர்
குண்டுகள் போட்டுத் தகர்த்தாலும்
குனிந்து நிற்காது நிமிர்ந்து நின்று
வென்று களமாடியவரே
உந்தனை என்னவென்று வியந்து
போற்றுவோம்
தாய்மண் மீட்பிற்காய்
தம்முயிரை ஈந்த செல்வங்களே
சுயநலமில்லா தெய்வீக சேவை
எமைக்காக்கும்் அரண்களாக
மாறுபட்ட நிலையிலும்
மறுக்காது காத்தீரே
வீறுகொண்டு எழுந்த
வீரவேங்கைகளை
காலமெலாம் நினைத்து
அஞ்சலிப்போம் ஆராதிப்போம்
அனுதினமும் உம்நாம்ம்
மாதவமே உந்தனையே
ஆயுள் உள்ளவரை.!

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

Continue reading