“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

முதுமை-69

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-04-2025

வலிமை கொண்டவர்க்கு
முதுமை பொக்கிஷ்ம்
வாழ்ந்து சாதித்த இளமையின்
மொத்த அனுபவம்!

நலிந்து மெலிந்த உடலும்
நரைத்து சுருங்கிய தோலும்
உறக்கமற்று, பார்வைகுன்றி விழியும்
உதிர்ந்த கால அடையாளம்

வலம் வந்த கால்கள்
வலுவிழந்து தள்ளாடுவதும்
முதுமையின் சவாலாய் மறதி
மனஅழுத்தம் மூட்டுவலி.

ஆரோக்கிய வாழ்விற்காய்
அளவான உறக்கமும் உணவும்.
உடற்பயிற்சியும், பல ஊக்கத்துடன்
ஆக்கம் காண முதுமை விலகும்.

Jeba Sri
Author: Jeba Sri