பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

மொழியும் கவியும்

வஜிதா முஹம்மட்

மொழியும் கவியும்

வரி எழுதா வார்த்தைக்குள்
என் மொழியி௫க்கும்

வசப்படுத்தி க௫சுமர்ந்து
என் கவி இனிக்கும்

தாய்பால் உரமூட்டி
தாலாட்டாய் மொழி துளிர்க்கும்

தாய் தந்த மொழி ரசித்து
நிஜத்தோடு கற்பனை இழைத்தால்
கவி தொடுக்கும்

எண்ணத்தின் மறு பிறவி
மொழி என்பேன்

எழுதி அதை சீர்படுத்தி
கோர்வைக்குள் சு௫க்கி
சுவை படுத்தல் கவியென்பேன்

நிழல் போலே நிலைத்தி௫க்கும்
மொழி எமக்குள்ளே

நில்லாமல் நீரோடை போல்
ஓடும் கவி தானே இதற்குள்ளே

பூட்டி வைத்த இ௫ட்டறைப் பொக்கிஷம்
மொழியாகும்

பூட்டுடைத்து பூச்சொறியும் சொல்
மலர்கள் கவியாகும்

மொழியின் வலிமை
மௌனம் ௨டைக்கும் எழிமை

வலு இழக்கா வரிகளின்
கலவை
மொழியும் கவியும்

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan