பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

மொழியும் கவியும்

சிவருபன் சர்வேஸ்வரி

மொழியும் கவியும்

அமுதமழை பொழியுது அழகாய் பாராய் //
சுவைபடும் சுந்தரத் தமிழே கேளாய் //
கனிதரும் சோலையழகு போன்றே என்றும் //
நறுமணம் வீசிடும் நற்றமிழே உணர்வாய் //
அழகாய் பதமெடு அடுக்காய் தொடுத்திடு //
மலர்வதும் அங்கே கவியும் அழகே //
விலையாய் வருவதும் இல்லையே நன்றாய் //
விதைக்கும் விதையிலே அழகுடன் முளைக்கும் //
பயிரின் செழிப்பைப் பார்த்தே மகிழும்//
கண்களின் ஒளியின் ஊடே காட்சியுமாகும் //
பண்ணுடன் இசைக்கும் நாதம் பாவுதலன்றோ //
மண்ணிலே பிறந்த மனிதத்தின் உணர்ச்சி //
மொழியாலும் கவியாலும் உலகாளும் போதில் //
முத்தமிழாலும் முளங்கிடும் கீதமே எங்கும் //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan