மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

ரஜனி அன்ரன்

“ நிமிர்வின் சுவடுகள் “…கவி…ரஜனி அன்ரன்(B.A) 02.03.2023

காலத்தை வென்று
காலநதியினில் கரைந்து
கோல விழிகளில் நிலைத்து
தலைமுறையினைக் காத்தவரை
தலைநிமிர வைத்தவரை
தலைக்கு மேலாக எமைச் சுமந்தோரை
நிமிர்வின் சுவட்டில் வாழ்ந்தவரை
நிமிசத் துளியாவது நினைத்திடுவோம் !

அரிய பட்டறிவுப் பாடத்தை தந்தவரை
அனுபவத்தின் அகராதிகளை
ஆற்றலை ஆளுமைகளை விதைத்தவரை
ஆணிவேராய் நின்றவரை
ஆழ்மனதில் நினைத்திடுவோம்
அவர் வாழ்ந்த சுவடுகளை
வழிகாட்டிய நெறிமுறைகளை
வரலாறாய் ஆக்கிடுவோம் !

உறுதுணையாயன பழுத்த உறவுகளை
உணர்வினில் கலந்து உறவாடிய மூத்தோரை
நிமிர்வின் சுவடுகளை
நித்திலத்தின் ஆணிவேர்களை
நித்தமுமாய் நினைத்திடுவோம்
நேர்வழியில் வாழ்ந்திடுவோம் !

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading