பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

ரஜனி அன்ரன்

“ அதனிலும் அரிதே “……..கவி……ரஜனி அன்ரன் (B.A) 07.04.2022

மாந்தர் பிறப்பு மண்ணிற்கு அரிது
வேந்தன் ஆட்சி வையகத்திற்கு அழகு
சுகநல வாழ்வே நீடு வாழ்விற்கு மெருகு
நிலையில்லா நீர்க்குமிழி வாழ்வில்
விலை மதிப்பில்லா மானிட உயிர்கள்
தொற்றின்றி வாழ்தல் அதனிலும் அரிதே !

சுற்றுச் சூழலைச் சுத்தம் செய்து
சுகாதாரம் தனைக் காத்து
சுத்தக் காற்றைச் சுவாசித்து
ஊட்டம் நிறைந்த உணவினை உண்டு
நாட்டத்தோடு நன்னீரை நன்றாய் அருந்தி
வாட்டம் போக்க உடற்பயிற்சி செய்து
காட்டமாக ஆரோக்கியம் பேணினால்
தேட்டமாக வாழலாம் தெம்போடு !

இயற்கையோடு இசைந்து வாழ்ந்து
வாழ்ந்த வாழ்விற்கு சான்றாகி
வாழ்வியலை வண்ணமாக்கி
வாழ்வோம் நோயின்றி வளத்தோடு
அதனிலும் ஆரோக்கிய வாழ்வோடு
உலக சுகாதார நாளே – எம்
வாழ்வாதாரத்தின் ஜீவாதார நாள் !

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading