ரஜனி அன்ரன்

“ பேசாமல் பேசும் உலகமொழி “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 22.09.2022

மனித குலத்தின் ஆதிமொழி
ஆதிமனிதனின் ஆட்சிமொழி
மொழிகளுக்கெல்லாம் வழி சமைத்தமொழி
கண்ணாலே காவியம் சொல்லி
கைவிரல் அபிநயத்தை கலைநயமாக்கி
பேசாமலே பேசும் உலகப் பொதுமொழி
சைகை மொழியெனும் மெளன மொழியே !

செவிப்புலன் அற்றோர்க்கு எல்லாம்
விழிப்புணர்வு கொடுத்த மொழி
இனமதம் கடந்த பொதுமொழியாகி
பல்லுலகும் பேதமின்றியே பேசும்மொழி
தொல்லுலகில் எழுபது மில்லியன் பேருக்கு
கைகொடுத்த நிசப்தமொழி
சைகை மொழியெனும் மெளனமொழியே !

எண்ணக் கருக்களை வெளிப்படுத்த
வண்ணத் தகவல்களைப் பரிமாறிட
அங்கங்களை அசைவாக்கி
அபிநயத்தால் புலப்படுமே சைகைமொழி
சைகை மொழியை நாமும் கற்று
கேட்க பேச முடியாதோர்க்கு வழிகாட்டி
வல்லமையோடு அவர்கள் வாழ
வாழ்வில் ஒளியேற்றுவோம் நாமும் !

Nada Mohan
Author: Nada Mohan