ரஜனி அன்ரன்

“ வலிசுமந்த நாள் “…கவி…ரஜனி அன்ரன் (B.A) 18.05.2023

பெருவலி சுமந்து பேரிடர் நடந்து
மாறாத வடுவாகி மனதில் ரணமாகி
மேகக் கூட்டம் கரும்புகையாகி
மேதினியே உறைந்து நின்ற
மே பதினெட்டாம் நாள்
ஆண்டுகள் பதினான்கு ஆனபோதும்
ஆறவில்லை இன்னும் காயங்கள் !

முள்ளி வாய்க்காலில் மூச்சடங்கியவர்க்கு
முத்தான சொந்தங்களை தொலைத்தவர்க்கு
உறுப்புக்களை உடமைகளை இழந்தவர்க்கு
உறுதுணையாக வேண்டும் நீதி
உரிமைகளுக்கு வேண்டும் தீர்வு
தொடர்கிறது நீதிக்கான போராட்டமும்
கிட்டவில்லை இன்னும் தீர்வுகளும் !

சிறைக் கைதிகளை மீட்டிட
மனக் காயங்களை ஆற்றிட
காணாமற் போனோரை மீட்டிட
ஒட்டுமொத்த உறவுகளும் ஒன்றுகூடி
ஒற்றுமையோடு குரல் கொடுத்து
நீதிக்காய் போராடி வீதியில் நிற்போர்க்கு
மடிந்த உறவுகளுக்கு வலிசுமந்த நாளில்
விடிவொன்று கிடைத்திட வழிசெய்வோம் !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading