ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி வரமாகும் வாய்ப்புக்கள் அவை தடமாகும் செயல் தழுவின் உரமாய் நாம் பயன்கொள்ளின் உரைத்தெழுதும் நம் தடங்கள் வாய்த்ததெல்லாம்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

01.06.23
கவி இலக்கம்-271
இன்னும் தொடருமா
இந்த வாழ்வு

நச்சுப் பாம்புகள் நாலு பக்கமும்
தாய் மண்ணில் உச்சம் தொடும் வேளை
மிச்சம் மீதியின்றிய வாழ்வில்
சொச்சமும் கூச்சமின்றிக்
கூனிக் குறுகுதே

குடியும் கும்மாளமும் கூத்திட
பொடியும் போதையும் துரத்திட
அடிதடியோ ஆவேஷமாய்
நச்சுப் பாம்புகள் திருகுதே

குண்டு வீச்சிலும் இன அழிப்பிலும்
பிழைத்தது ஏன் என ஏங்குதே
வாழ்ந்த நாட்கள் புரியாது
மாந்தர் வயிறு எரியவே
வாழும் நாட்கள் வீணாகப் போகுதே

தாமும் திருந்தாது
மற்றவரும் திருந்தவிடாது
நாளும் பொழுதும் மூளும்
இந்த வாழ்வு சாகும் வரையிலும்
என்றுந் தொடருமா

Nada Mohan
Author: Nada Mohan