” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

01.06.23
கவி இலக்கம்-271
இன்னும் தொடருமா
இந்த வாழ்வு

நச்சுப் பாம்புகள் நாலு பக்கமும்
தாய் மண்ணில் உச்சம் தொடும் வேளை
மிச்சம் மீதியின்றிய வாழ்வில்
சொச்சமும் கூச்சமின்றிக்
கூனிக் குறுகுதே

குடியும் கும்மாளமும் கூத்திட
பொடியும் போதையும் துரத்திட
அடிதடியோ ஆவேஷமாய்
நச்சுப் பாம்புகள் திருகுதே

குண்டு வீச்சிலும் இன அழிப்பிலும்
பிழைத்தது ஏன் என ஏங்குதே
வாழ்ந்த நாட்கள் புரியாது
மாந்தர் வயிறு எரியவே
வாழும் நாட்கள் வீணாகப் போகுதே

தாமும் திருந்தாது
மற்றவரும் திருந்தவிடாது
நாளும் பொழுதும் மூளும்
இந்த வாழ்வு சாகும் வரையிலும்
என்றுந் தொடருமா

Nada Mohan
Author: Nada Mohan