புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

17.08.23
கவி இலக்கம்-279
குறிக்கோள்

அலையோடு பிறவாத கடலில்லை
உலையோடு கொதியாத சாதமில்லை
உடலோடு தொடராத நிழலில்லை

குறிக்கோள் இல்லாத வாழ்வு
கூனிக்குறுகி வெடித்துச் சிதறி
சீரழிந்து விடுமே

அறிவுக்கேற்ப புத்திசாலித்தனம்
மூளையிலிருந்து பறித்தெடு
செறிந்த வாசம் மலர்ந்திடுமே

சென்று சேருமிடம் வரையறு
பயணம் தொடர்ந்து நடைபோடுமே

என் கடமை என்னவென்று புரிந்திடு
தன்னாலே உடைமை,உரிமை
வந்திடுமே

தீயதை விட்டு நல்லது செய்ய
அதர்மம் நீங்கி தர்மம் ஓங்க
நன்னெறி நாட்ட வெற்றி
பெற்றிடுமே

நம் நாட்டுக்கு என்ன தேவை
சிந்தித்து சிறகை விரித்திட
எம்மால் முடிந்தது செய்து
மனம் நிறைத்திடுவோமே .

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading