” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

01.02.2024
கவி இலக்கம் -301
கைக்குள் கையாய்

மெய்க்குள் தோய்ந்த பொய்
உணர்வுகள் ஊடுருவி ஒரு
கைக்குள் கையாய் பையில்
அடங்கா கைத் தொலைபேசி

முடங்கும் நேரந் தெரியாது
தொடங்கும் பொய்கள்
தொய்வின்றி அல்லும் பகலும்
உரையாடும் தொல்லைபேசி

யார் யாரோ முகந்தெரியா
உறவுகள் போர்வையாக்கி
உரையாடல் ஊடலாகிப்
பெரும் பாடாய்ப் போர்
தொடுத்தது

முக்கிய தேவை மறந்து
மூக்கை நுழைத்த பதிவு
கோர்வையாக்கிப் பாதை
தெரியாது போகுமிடம் புரியா
தேவையற்றவை இழுத்துத்
தலையிடி ஆனது .

Nada Mohan
Author: Nada Mohan