மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

20.01.2022
கவி ஆக்கம் 191
கொண்டாட்டக் கோலங்கள்
கொண்டாட்டமோ பலருக்கு
திண்டாட்டமோ சிலருக்கு
கொண்டாட்டக் கோலம்
துன்பப்பட்டவருக்கு புண்பட்ட
நெஞ்சமானதே

கண்ட கண்ட பலகாரத்தைச்
சுட்டு வேண்டாதவர்க்கு
அழைப்பை விடுத்து
தடிகொடுத்து அடிவாங்கும்
கூத்தாடியே!

மதுபானப்புட்டியும்,மாதுக்குட்டியும்,
போதை வஸ்தும் போதாக்குறைக்கு
அளவு மீறி வீணாப் போகும்
உணவுப் பட்டியலும் வயிறு நிறைய
வந்தவரை”நீ யாரெனக்” கேட்டிடவே

உண்ண உணவின்றி இருக்க வீடின்றி
படுக்க பாயின்றி அலைந்தவனுக்குப்
பஞ்சு மெத்தை கிடைத்தால்
சொல்லவும் வேண்டுமா?

சொல்லணாத் துயரம் சோகமாகும்
குடும்பமதில் அல்லும் பகலும்
தீராத வலிகளே திருந்தாத ஜென்மங்கள்
இருந்தென்ன லாபமதில் இளையவரும்
இவ் வண்டியில் ஏறிடுவாரோ?

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading