கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

17.02.22
கவி ஆக்கம்-207
உருமாறும் புதிய கோலங்கள்
ஆண்டாண்டு தோறும் புலம்பி அழுது
வேண்டாத வேறு வினை சுமந்து
தீண்டத்தகாத பழக்க வழக்கம் புகுந்து
கண்டு கொண்ட இன்பமது மீண்டும்
தொடரவும்,மறக்கவும் முடியாது பிணைந்து

புதுப்புது ரசனைகள் மயங்கி பூகம்பமாயிட
குதூகலக் குடும்பம் குலைந்து கூண்டில் நின்றிட
பாதுகாவலனோ பாழாய்ப் போன மது,மாது
போதையில் பொத்தென புகுந்தழித்திட

கட்டிய மனைவி கண்ணீருஞ் சோறுடன்
காவல் காத்து பெற்ற பிள்ளை வெறுத்து
மன அழுத்தத்தில் மாறுபட்ட முடிவெடுக்க
கொன்றது கொரோனா என்று வேலையின்றி
நாளும் பொழுதும் வீட்டில் இருந்து தொடரும்
பாதகச் செயலில் உருமாறும் கோலங்கள்
மாறாதா?

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading