புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

23.05.23
கவி இலக்கம் -103
முள்ளி வாய்க்கால்

முள்ளி வாய்க்காலில் மூழ்கிய
சுவடுகள் முள்ளுக் கம்பியில்
முனகுதே

பத்து மாதம் சுமந்த தாயில்
பொத்தென விழுந்த கொத்துக்
குண்டால் உடல் கிழிந்து
சிசு வெளிவந்ததே

உதிரம் பீறி ஊறிட்ட தாயோ
உயிரோடு போராட
பால் குடிக்கும் சிசுவோ
மடியோடு திண்டாடிப்
பிழைத்துக் கொள்ளுதே

பள்ளிச் சிறுவர்,இளையோர்,
பெரியோர் என ஏவிய
எறிகணையால் உயிருடன்
எரிந்து சாம்பலானாரே

நரக வாழ்வுக்கு நீதி ஏது
உலக வல்லரசுக்கு அநீதி
பொது உழைப்பாகுதே

முள்ளி வாய்க்கால் தொடர்கதை
முடிவல்ல
கொள்ளி போடும் தன் இனமே
தடியடி கொடுக்க முடிவான
இடி ஒன்று வந்திடுமே .

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading