ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

25.05.23
கவி இலக்கம் -270
பொசுக்கிய தீயும்
பூத்திட்ட பொலிவும்

1981 மே 31 பன்னிரண்டு மணியளவில்
வக்கிர புத்தியில் எரித்தழிப்பு
சிங்கள வெறியரின் சதியில்
சீக்கிர இன ஒழிப்பு

பங்காளியின் வன்முறைக் கட்டவிழ்ப்பு
பெளத்த தேசியவாதிகளின் கொடுமையில்
அவிட்டு விடப்பட்ட கூட்டமைப்பு
காடையரின் கடுமையான கட்டமைப்பால்
பெளத்த நாடெனும் வெறியான
பூர்வீகப் படைப்பு

ஆதாரமும் ஆவணமும் இல்லாது
ஆக்கிய பழிதீர்ப்பு
வெட்ட வெட்டத் தழைக்குமே
குட்டக் குட்ட நிமிருமே என்று

பொசுக்கிய தீயில் எரித்து
நசுக்கியது போதும் என்றும்
விசுக்கிய நொடியில் புதைந்த
விதையே வீறு கொண்டு விருட்சமாய்
விழுது கொண்டதே புகழோடு
பூத்திட்ட பொலிவோடு மீண்டும் .

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர...

    Continue reading