தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

25.05.23
கவி இலக்கம் -270
பொசுக்கிய தீயும்
பூத்திட்ட பொலிவும்

1981 மே 31 பன்னிரண்டு மணியளவில்
வக்கிர புத்தியில் எரித்தழிப்பு
சிங்கள வெறியரின் சதியில்
சீக்கிர இன ஒழிப்பு

பங்காளியின் வன்முறைக் கட்டவிழ்ப்பு
பெளத்த தேசியவாதிகளின் கொடுமையில்
அவிட்டு விடப்பட்ட கூட்டமைப்பு
காடையரின் கடுமையான கட்டமைப்பால்
பெளத்த நாடெனும் வெறியான
பூர்வீகப் படைப்பு

ஆதாரமும் ஆவணமும் இல்லாது
ஆக்கிய பழிதீர்ப்பு
வெட்ட வெட்டத் தழைக்குமே
குட்டக் குட்ட நிமிருமே என்று

பொசுக்கிய தீயில் எரித்து
நசுக்கியது போதும் என்றும்
விசுக்கிய நொடியில் புதைந்த
விதையே வீறு கொண்டு விருட்சமாய்
விழுது கொண்டதே புகழோடு
பூத்திட்ட பொலிவோடு மீண்டும் .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading