கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

ராணி சம்பந்தர்

05.11.24
ஆக்கம் 165
அழியாத கோலங்கள்

அழுது அழுது விழுது
ஊன்றித் தொழுது
ஓய்ந்த காலம்
முழுதாய் விழுங்கிய
அரசியலில் பழுதாய்த்
தேய்ந்த கோலம்

நாளும் பொழுதும்
நரக வாழ்வு
இரவும் பகலும்
இனத் துவேஷம்
இந்துக் கோயிலில்
குந்திடும் புத்தரின்
மாயாஜாலம்

பரம்பரை பரம்பரைத்
தமிழனின் காணிச்
சொத்து சூறையாடல்
சாதுவாக இருந்த தமிழன் பாதை மாறிப்
போதை ஏற சுடுகாட்டுச்
சாம்பல் உட்கொண்டு
உயிர் போக்க அவலம்

முகமூடிக் கொள்ளை,
கொடுவாள் கத்திக்
குத்து, சின்னன் பெரிசு
அன்றி மானபங்கக்
கேவலம்

கழுகுகளின் இழிவான
பார்வையில் சிறகு
இருந்தும் பறக்க முடியாது சிக்கித் தவிக்கும் குஞ்சுகளின்
வலியிலும் அடாவடி
அரசியலிலும்

தாய் மண்ணின் அப்பாவிப் பெற்றோரில்
நிம்மதி இழந்து நிர்க்
கதியாய் நிற்கும் அழியாத கோலங்கள்.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading