” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர்

05.11.24
ஆக்கம் 165
அழியாத கோலங்கள்

அழுது அழுது விழுது
ஊன்றித் தொழுது
ஓய்ந்த காலம்
முழுதாய் விழுங்கிய
அரசியலில் பழுதாய்த்
தேய்ந்த கோலம்

நாளும் பொழுதும்
நரக வாழ்வு
இரவும் பகலும்
இனத் துவேஷம்
இந்துக் கோயிலில்
குந்திடும் புத்தரின்
மாயாஜாலம்

பரம்பரை பரம்பரைத்
தமிழனின் காணிச்
சொத்து சூறையாடல்
சாதுவாக இருந்த தமிழன் பாதை மாறிப்
போதை ஏற சுடுகாட்டுச்
சாம்பல் உட்கொண்டு
உயிர் போக்க அவலம்

முகமூடிக் கொள்ளை,
கொடுவாள் கத்திக்
குத்து, சின்னன் பெரிசு
அன்றி மானபங்கக்
கேவலம்

கழுகுகளின் இழிவான
பார்வையில் சிறகு
இருந்தும் பறக்க முடியாது சிக்கித் தவிக்கும் குஞ்சுகளின்
வலியிலும் அடாவடி
அரசியலிலும்

தாய் மண்ணின் அப்பாவிப் பெற்றோரில்
நிம்மதி இழந்து நிர்க்
கதியாய் நிற்கும் அழியாத கோலங்கள்.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan