“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

ராணி சம்பந்தர்

21.05.24
ஆக்கம் 147
நிர்மூலம்
ஆலம் வேராய் காலங் காலமாக விழுது ஊன்றிய தமிழினம்
கோலம் மாற்றி நாறு
நாறாய்க் கூறாக்கி
அலங்கோலமாக்கிய
பேரினவாதம்

ஓலமிடும் குமிறல் கேளாத ஐ .நாடு
சபை ,வல்லரசும்
ஜெனிவாவில்
ஊளையிடும் சதிரான
விவாதம்

பாலம் போட்டு வேல்
பாய்ச்சிய அந்நியர் சதி
நலம் இழந்து நம் வாழ்வு
தொலைந்து குடும்பம்
கலைந்து வீதிக்கு வந்தும் இன்று வரை
இழந்தது எதுவும் பெறாத பாதகமே

நிர்மலமான வரலாற்று
சந்ததி நிர்க்கதியான
சோகக் குரலாறே
ஆதி மூலத்தையே
இன அழிப்பில் பிடுங்கிட போதி மூல
புத்தம் உடுக்கிட நாதியற்று நீதியிழந்து
மனிதநேயமும்
நிர்மூலமானதே.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan