பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ராணி சம்பந்தர்

21.05.24
ஆக்கம் 147
நிர்மூலம்
ஆலம் வேராய் காலங் காலமாக விழுது ஊன்றிய தமிழினம்
கோலம் மாற்றி நாறு
நாறாய்க் கூறாக்கி
அலங்கோலமாக்கிய
பேரினவாதம்

ஓலமிடும் குமிறல் கேளாத ஐ .நாடு
சபை ,வல்லரசும்
ஜெனிவாவில்
ஊளையிடும் சதிரான
விவாதம்

பாலம் போட்டு வேல்
பாய்ச்சிய அந்நியர் சதி
நலம் இழந்து நம் வாழ்வு
தொலைந்து குடும்பம்
கலைந்து வீதிக்கு வந்தும் இன்று வரை
இழந்தது எதுவும் பெறாத பாதகமே

நிர்மலமான வரலாற்று
சந்ததி நிர்க்கதியான
சோகக் குரலாறே
ஆதி மூலத்தையே
இன அழிப்பில் பிடுங்கிட போதி மூல
புத்தம் உடுக்கிட நாதியற்று நீதியிழந்து
மனிதநேயமும்
நிர்மூலமானதே.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading