27
May
வியாழன் கவி -2345
ஒரு நாள்
நீயில்லாவிட்டால்..!!
நினைக்கையிலே உயிர்
வதைபட்டுக் கொள்ள
நீள் நாள் ஒன்றை எப்படி
நீயின்றிக்...
27
May
28.05.2026 மண் வாசம்-3000 ஜெயா நடேசன்
தாய் மண்ணே உன்னை மறக்கவில்லை
கால் பதித்த நாள் தொட்டவரை இற்றைவரை
புலம்பெயர் வந்து வசதியாக...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
https://youtu.be/gh6MwxaacJs?is=_TmgRlYGtFEY7MNX
ராணி சம்பந்தர்
04.06.24
ஆக்கம் 149
பெண்ணே
பள்ளிக் கலை விழாவில் பெண்ணே
நீ துள்ளி ஆடிய நடனம்
கண் முன்னே
வெள்ளித் தட்டில் பூக்கள் தூவி அலை அலையான பள்ளி
மாணவர் கை தட்டிய
ஆரவாரம் என் காதில்
இன்னும் ஒலிக்குதே
புள்ளி போட்ட ரவிக்கை
செவ்வர்ணச் சேலை
கட்டி வண்ணச் சோலை
இல் சக தோழியருடன்
சுற்றிய உன் சிங்காரப்
பார்வை எனைக் கண்டு
சேதி என்னவோ சொல்லியதே
பெண்ணே பொன்னு
மணியே கன்னக் குழி
அழகும், மென் புன்னகை பூத்த முத்துப்
பல் முக அழகும் சிட்டாய்ப் பறக்க மனம்
பேதலிக்குதே
கண்ணே உன் கழுத்தில்
மாலையிட்டு மணக் கோலம் காணத் துடிக்கும் என் உயிரில்
கலந்திட உளம் திறந்து
மனம் நிறைவான பதில்
தருவாயா பெண்ணே .
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...