வசந்தா ஜெகதீசன்

பொங்கலோ பொங்கல்….
தைமகளின் வரவு
தரணியெங்கும் நிமிர்வு
வழிகாட்டும் தையாய்
வரும் எழிலின் மெய்யாய்
உழவன் நிலை உணர்த்தும்
உற்பத்தியை மதிக்கும்
உணவு வளம் பெருக்கும்
உணர்த்தி வலுப்படுத்தும்
அறுவடையின் செழிப்பில்
ஆதவனின் பங்கில்
அகிலமது நிறைக்கும்
பயரினத்துப் பயனே
பாரில் வாழும் உயிர்கள்
பசிபோக்கும் தென்பில்
படையலிட்டோம் பொங்கல்
பகலவனே நன்றி
பாரில் நீயே பரிதி
கூறும் நன்றி கோடி
யாதும் உனது கொடையே
பொங்கலிட்டும் பொங்கலோ பொங்கல்.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading