“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

காற்றின் மொழியாகி வாழ்வு தந்தாய்…

ஆற்றின் ஆழமாய் அறிபொருளின் விருட்சமாய்
காற்றின் வலிமையிலே காத்திடமாய் கலந்து வந்தாய்
போற்றும் மகிமையிலே போதிக்கும் அறிவிலே
வேற்றகத்து வாழ்விற்கு வீறுகொள் வாஞ்சை தந்தாய்

உரிமை நிறைந்திடவும் உறவாய்ப் பேணிடவும்
மொழியின் சுடராகி முனைந்திடத் தளமானாய்
எண்ணற்ற வழிசமைத்து எதிலும் மகுடமிட்டு
எழுத்திலே முதன்மையிட்டு
எவருக்கும் ஏற்றமிட்டு
சினிமாவைப் புறந்தள்ளி செதுக்கலிட்ட வானொலியே
அறிவிற்கு அடித்தளம் எவருக்கும் முதலிடம்
நேயர்கள் தொகுப்பாக்கம் இளையோர்கள் படைப்பாக்கம்
எதற்கில்லை வழிகாட்டல்
மருத்துவமும், அறிவியல் ஆய்வுகளும் தொகுப்புக்களும் தொடர்மேடை நிகழ்வுகளும்
பயிற்றலில் பயணிக்கும் பாமுகம் போல் பணியாற்றும்
பண்படுத்தல் பயனூக்கம் கவித்திறனில் நீள் தொடர்ச்சி
காற்றலையின் முதலொலியே
திரையிசையின் பாடலின்றி
திருப்பத்தின் திறவுகோலாய்
தொழில் நுட்ப வளர்ச்சியுடன் தொடராகிப் பயணிக்கும் வளர்ச்சியில் பாமுகமே
வனப்புமிகு காற்றலையே
மொழியாகி வாழ்வு தந்தாய்
முதன்மையில் நிறைகின்றாய்

இளையோர்கள் நேயர்கள்
உச்சம் தொடும் உருவாக்கம்
அச்சமற்ற பணிநோக்கம்
அத்திவாரம் தளமிட்டு
அர்ப்பணத்தில் பணியாற்றும்
காற்றலையின் சேவகமே தமிழ்மொழியின் யாசகமே
இதயத்து நன்றிகள் ஈகைக்கு நிகரில்லை
இடரின்றி உயர்வில்லை இலக்கிற்கு ஏது எல்லை.

நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading