வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
நிர்மூலம்…
கனதி குன்றிட
காயங்கள் ஆறிட
வலிகள் அகன்றிட
வருமா வழியொன்று
வரமாய் கேட்டாலும்

அன்றைய நிர்க்கதி
அழிவுற்ற பேரவலம்
நிர்மூலம் கோலங்கள்
நீள்கிறதே நெடும் தொடராய்
நித்தமும் பெருவலியாய்

மே பதினெட்டில்
மீட்பற்ற நிர்மூலம்
ஊர் பேரற்ற உபாதையின்
நிர்மூலம்
வரலாறு தொலைத்த வலிகளில் நிர்மூலம்
வாழ்வின் அவதியில்
உறவுகள் இழப்பில்
வறுமையின் சுவட்டில் நிர்மூலமாகி ஏதிலி வாழ்வின்
இடரின் பிடியில்
நிர்மூலமாகிய தமிழின வாழ்வு
தளிர்க்குமா தடைகள் உடையுமா.
நன்றி
வசந்தா ஜெகதீசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading