பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
நிர்மூலம்…
கனதி குன்றிட
காயங்கள் ஆறிட
வலிகள் அகன்றிட
வருமா வழியொன்று
வரமாய் கேட்டாலும்

அன்றைய நிர்க்கதி
அழிவுற்ற பேரவலம்
நிர்மூலம் கோலங்கள்
நீள்கிறதே நெடும் தொடராய்
நித்தமும் பெருவலியாய்

மே பதினெட்டில்
மீட்பற்ற நிர்மூலம்
ஊர் பேரற்ற உபாதையின்
நிர்மூலம்
வரலாறு தொலைத்த வலிகளில் நிர்மூலம்
வாழ்வின் அவதியில்
உறவுகள் இழப்பில்
வறுமையின் சுவட்டில் நிர்மூலமாகி ஏதிலி வாழ்வின்
இடரின் பிடியில்
நிர்மூலமாகிய தமிழின வாழ்வு
தளிர்க்குமா தடைகள் உடையுமா.
நன்றி
வசந்தா ஜெகதீசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading