வசந்தா ஜெகதீசன்

மரத்துப் போனது மானிட நீதி

மரத்துப்போனது மானிடநீதி…
கணதியின் வாழ்வில் கரைந்திடும் பொழுதில்
மனிதம் புதையுது மாண்புகள் மறையுது
இதயம் இருளுது ஈரம் குன்றுது
இடரின் தேட்டமே இறுகி விளையுது

உறவுகள் விலகுது உபாதைகள் பெருகுது
உதவிகள் மறையுது உபத்திரமாகுது
அறிவுக்கண்ணில் அன்னியப் பார்வை
அகிலத்திரையில் அநீதியின் கூர்மை

மனிதநேயம் மறைந்து போகுது
மானிட நீதி மரத்துப் போகுது
அநீதியின் விம்பம் ஆலமரமாய்
அனுதினம் வளருது ஆணிவேராய்

பொசுங்கிடும் இதயத்தில் பூப்பது பாரம்
நசுங்கிடும் வாழ்விற்குள் நலியுது காலம்
மீண்டும்; பிறக்குமா மனிதநேயம்
மீளவம் தளிர்க்குமா மானிடநீதி.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம்_215 சிவாஜினி சிறிதரன் "நல்லுறவு" பொறுமை சகிப்பு தன்மை இரண்டும் தெய்வீக குணங்கள் இதற்கு எஞ்சிய நற்குணம் ஏது...

Continue reading

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading