நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

மரத்துப் போனது மானிட நீதி

மரத்துப்போனது மானிடநீதி…
கணதியின் வாழ்வில் கரைந்திடும் பொழுதில்
மனிதம் புதையுது மாண்புகள் மறையுது
இதயம் இருளுது ஈரம் குன்றுது
இடரின் தேட்டமே இறுகி விளையுது

உறவுகள் விலகுது உபாதைகள் பெருகுது
உதவிகள் மறையுது உபத்திரமாகுது
அறிவுக்கண்ணில் அன்னியப் பார்வை
அகிலத்திரையில் அநீதியின் கூர்மை

மனிதநேயம் மறைந்து போகுது
மானிட நீதி மரத்துப் போகுது
அநீதியின் விம்பம் ஆலமரமாய்
அனுதினம் வளருது ஆணிவேராய்

பொசுங்கிடும் இதயத்தில் பூப்பது பாரம்
நசுங்கிடும் வாழ்விற்குள் நலியுது காலம்
மீண்டும்; பிறக்குமா மனிதநேயம்
மீளவம் தளிர்க்குமா மானிடநீதி.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan