பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

மாதவமே உந்தனை..

மாதவமே உந்தனை …
கற்கால கரிகாலர்
காவலரண் காப்பாளர்
ஈழம் மீட்பீற்காய் இன்னுயிரை ஈர்ந்தவர்கள்
ஞாலக்குன்றின் நம்பிக்கை போரொளிகள்
விடுதலை யாகமே வேள்வியாய்
வீரத்தின் வேட்கையில் வெற்றியாய்
நேருக்கு நேராய் நின்றெதிர் போரில்
ஈழத்தின் மீட்பே இலக்கின் அம்பு
காலத்தை வெல்வதே கடமையின் சிறப்பு
மாதவ மைந்தர்கள் மாதவம் புரிந்தே
மனிதத்தின் நேயத்தை மாண்புடன் போற்றினர்
ரணமாய் கொதிக்கும் மனதின் வலுவும்
கணமாய் தாங்கும் போரின் வலியும்
புடமிடு ஈழத்தின் புன்னகை வாழ்வும்
உறவுகள் காப்பதே உயரிய மேன்மையாய்
காடும் மலையும் கடந்த போரும்
சாவும் வாழ்வும் சந்திக்கும் நிகராய்
துணிந்தனர் வீரர் தம்முயிர் ஈர்ந்தனர்
தகர்ந்து மடிந்தனர்
மண்ணினை மீட்டி மரணத்தை வென்றனர்
ஈகையின் கொடைகள் ஈழத்தின் வேர்கள்
மாதவப் புதல்வரே மண்ணின் மைந்தரே
காலத்தை வெல்லும் கல்லறை கனவுகள்
ஞாலத்தில் மெய்ப்படும் நம்பிக்கை விளக்குகள்.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan