“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

சமூகம்…
ஒற்றைச் சொல்லில் ஒரு விருட்சம்
ஒங்கி வளர்ந்து கிளை பரப்பும்
மூங்கில்த் தருவாய் இசை எழுப்பும்
முழுமதி நிலவாய் முனைப்பெழுதும்

சமூகச் சிந்தை சரி நிகராய்
சாலச் சிறப்பு சரிதங்களாய்
உலகின் உயர்வை உருவாக்கும்
உராய்ந்து திறக்கும் விழிப்புணர்வே

அழகில் அவனி மெய்ப்படுமே
அதியுயர் வழித்தடம் புலப்படுமே
சமூகம் சார்ந்த ஒற்றைக்குடில்
சாதனை நிறைக்கும் விருட்சநிழல்.
நன்றி

சந்தம் சிந்தும் கவிக்கள தொகுப்பாளருக்கும், பாமுகப்பங்காற்றலுக்கும், ஒவ்வொரு கவியாளர்களுக்கும் மிகுந்த பாராட்டுக்கள்.

Nada Mohan
Author: Nada Mohan