வசந்தா ஜெகதீசன்

வரலாற்றில்…
விரக்தி வாழ்வை புறந்தள்ளி
விடியும் வாழ்வை உரமாக்கி
துணிவை விதைப்போம் உரமாகி
தூரம் விலத்து தொடர்பிலே

பாரம் விலகும் அன்பிலே
பாதை செப்பும் அகத்திலே
நாளைய உறுதி நமக்குள்ளே
நானிலம் காக்கும் திடத்திலே

கடந்தவை மறத்தல் தகமையே
காக்கும் கரத்தில் வலிமையே
ஞாலம் நிலைக்கும் ஒற்றுமை
நலிந்த குன்றும் வேற்றுமை

திரண்டே எழுவோம் இனமாகி
திரும்பிய பாதை வலிபோக்கி
புதியவை பூக்கட்டும் ஈழத்தில்
புதுசாசனம் எழுதும் வரலாற்றில்.!
மிக்க நன்றி.
கவிகளை செப்பனிட்டு காத்திடப்படைப்பின் வலுப்படுத்தலுக்கு மிகையான நன்றிகள்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading