வசந்தா ஜெகதீசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
விருப்புத்தலைப்பு
அன்னையர் தினமே….
வரமாய் கிடைத்த உறவிது
வாஞ்சை நிறைந்த உளமிது
உறவாய் போற்றும் உள்ளன்பு
உதிரம் கலந்த தாயன்பு
புவனம் போன்ற பொறுமையும்
ஐக்கியம் காக்கும் தகமையும்
அன்பின் ஊற்றாய் அணிகலனாய்
பண்பில் பலதை வேதமாய்
பக்குவமான பட்டறிவை
பாசம் நிறைத்து பகிர்பவர்
சேய்கள் வாழ்வு செம்மைபட
சிரத்தை காட்டும் பேரன்பே
கடினம் பலதைக் கடந்துமே
காக்கும் தெய்வம்
தாய்மையே
என்றும் எமக்காய் வாழ்பவர்
எதிலும் உறவாய் திகழ்பவர்
ஈடிணையற்ற தாயன்பு
ஈகம் நிறைந்த பேரன்பு.
நன்றி
மிக்க நன்றி

*14.5.23.ஐரோப்பாவில் அன்னையர் தினம்)*

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading