வசந்தா ஜெகதீசன்

பெற்றோரே…
பேறுகள் பலவாகி
பெரும்பேறும் வாழ்வாகி
சேய்களின் காப்பாகி
செம்மையுற வாழ்ந்தவர்கள்

செப்புகின்ற பட்டறிவும்
சீராக்கும் வாழ்வறமும்
காப்பரணாய் வேலியிட்டு
காத்திட்ட பெற்றோரே

கடனது பாரியது
காலத்தால் ஈடுசெய்ய முடியாது காத்திடமாய்
கணக்கிறது

ஞாலத்தில் நாம் வாழும்
நல் வாழ்வின் வெற்றியே
உங்களின் பாடுகளின்
உன்னதத்தை வெளிச்சமிடும்

வேராகி விழுதாகி
விருட்சமாய்
தொடர்கின்றோம்
தூரிகையாய் துலங்க வைத்தீர்
பேருவகைப் பேறு பெற்றோம்
பெருமையுடன் வாழ்கின்றோம்
நிதமுமாய் சான்றாகும்
நீங்களிட்ட அறமே
எம்மோடு
அறிவுரையே வாழ்வோடு!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading