வசந்தா ஜெகதீசன்

வலைப்பூ
உலகை ஒன்றாய் இணைக்கும்
உறவை இணைத்துப் படரும்
அறிவும் செயலும் உராய்ந்து
அகில நிகழ்வாய் விரிந்து
ஆக்கும் விருத்தி அதிகம்
அழிவும் நிகழ்ந்து தொடரும்
வலைப் பூ உலகின் வசமாய்
வாழ்வே இன்று மாயம்
அழைப்பில் அன்பில் பஞ்சம்
அவரவர் ஆற்றல் மிஞ்சும்
விழாக்கள் இன்று உச்சம்
வீண் செலவே அதிக பட்சம்
நன்றும் தீதும் நாமாய்
நகர்ந்து வெல்லும் வாழ்வே
நலிதலின்றி நலமாய்
நாளும் மிளிரும் திடமாய்!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading