வருமா வசந்தம்

ஜெயம் தங்கராஜா

ஆதவன் கதிர்கள் பூலோகத்தைத் தொட்டன
ஆதலால் வசந்தம் கோலங்கள் இட்டன
பச்சை ஆடை அணிந்தாள் பூமியன்னை
மிஞ்சும் அழகாய் மாற்றிக்கொண்டாள் தன்னை

பாடியே பறக்கும் பறவைகள் உயரத்தில்
வாடிய உயிர்களும் இனியில்லை துயரத்தில்
வந்ததால் வசந்தம் ஏற்பட்ட நிகழ்வு
சிந்திடும் மகிழ்ச்சிக்கு இல்லையே அளவு

இதுபோல் வசந்தம் வாழ்விலும் வருமே
புதிய அழகான காலத்தை தருமே
தொலையாது வசந்தமும் நுழைந்திடும் தன்னாலே
அழைக்குது அங்கேதான் திரும்பிப்பார் பின்னாலே

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading