சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

வருமா வசந்தம்

ஜெயம் தங்கராஜா

ஆதவன் கதிர்கள் பூலோகத்தைத் தொட்டன
ஆதலால் வசந்தம் கோலங்கள் இட்டன
பச்சை ஆடை அணிந்தாள் பூமியன்னை
மிஞ்சும் அழகாய் மாற்றிக்கொண்டாள் தன்னை

பாடியே பறக்கும் பறவைகள் உயரத்தில்
வாடிய உயிர்களும் இனியில்லை துயரத்தில்
வந்ததால் வசந்தம் ஏற்பட்ட நிகழ்வு
சிந்திடும் மகிழ்ச்சிக்கு இல்லையே அளவு

இதுபோல் வசந்தம் வாழ்விலும் வருமே
புதிய அழகான காலத்தை தருமே
தொலையாது வசந்தமும் நுழைந்திடும் தன்னாலே
அழைக்குது அங்கேதான் திரும்பிப்பார் பின்னாலே

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading