சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

வருமா வசந்தம்

ஜெயம் தங்கராஜா

ஆதவன் கதிர்கள் பூலோகத்தைத் தொட்டன
ஆதலால் வசந்தம் கோலங்கள் இட்டன
பச்சை ஆடை அணிந்தாள் பூமியன்னை
மிஞ்சும் அழகாய் மாற்றிக்கொண்டாள் தன்னை

பாடியே பறக்கும் பறவைகள் உயரத்தில்
வாடிய உயிர்களும் இனியில்லை துயரத்தில்
வந்ததால் வசந்தம் ஏற்பட்ட நிகழ்வு
சிந்திடும் மகிழ்ச்சிக்கு இல்லையே அளவு

இதுபோல் வசந்தம் வாழ்விலும் வருமே
புதிய அழகான காலத்தை தருமே
தொலையாது வசந்தமும் நுழைந்திடும் தன்னாலே
அழைக்குது அங்கேதான் திரும்பிப்பார் பின்னாலே

Nada Mohan
Author: Nada Mohan