புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

வாரம் 241

[ வாரம் 241 ]
“தீப ஒளியே”

தீபஒளியேற்றிய இறைவழிபாடு தமிழரின் சமயச்சடங்காகும்.
ஒளிவடிவையே இறைதோற்றமாக்குவதும் சைவசமயமாகும் .
பிறமதங்கள் தீபஒளியேற்றுதல் ஒருமைப்பாட்டின் அம்சமாகும்
மெழுகுதிரி ஏற்றி, எண்ணெய்த்தீபங்காட்டி, மின்விளக்கு அலங்காரமும் இறை வழிபாட்டுமுறையாகும்.

ஒளிபிறந்து அஞ்ஞான இருளகன்று மெஞ்ஞான ஒளிவீசும் தீபஒளி
ஒளியின்றி உயிர்களுக்கு வாழ்வில்லை,ஒளியில்லா உலகிற்கே அர்த்தமில்லை
சூரிய ஒளியின்றி தாவரங்களுக்கோ உணவில்லை
தீப ஒளியில் வட்டமிடும் பூச்சிகள், தீபாராதனையில் பக்தர்கள், ஒளியின் கவர்ச்சி எங்கில்லை?

தீபஒளியின் மகத்துவம்காட்டும் ஒலிம்பிக்தீபம்
தீமையகற்றி நன்மைகாட்டும் தீபாவளி அலங்காரதீபம்
பிதுர்கடன் தீர்த்தல் கடமையெனக்காட்டும் கார்த்திகைத்தீபம்
மாவீரர் போற்றித்தாயகம் மீட்போம் எனும்அஞ்சலித்தீபம்
தீபஒளியே நீடுவாழ்க! தமிழர்தம் நெஞ்சங்களில் என்றும் வாழ்க!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading