புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
வாரம் 241
[ வாரம் 241 ]
“தீப ஒளியே”
தீபஒளியேற்றிய இறைவழிபாடு தமிழரின் சமயச்சடங்காகும்.
ஒளிவடிவையே இறைதோற்றமாக்குவதும் சைவசமயமாகும் .
பிறமதங்கள் தீபஒளியேற்றுதல் ஒருமைப்பாட்டின் அம்சமாகும்
மெழுகுதிரி ஏற்றி, எண்ணெய்த்தீபங்காட்டி, மின்விளக்கு அலங்காரமும் இறை வழிபாட்டுமுறையாகும்.
ஒளிபிறந்து அஞ்ஞான இருளகன்று மெஞ்ஞான ஒளிவீசும் தீபஒளி
ஒளியின்றி உயிர்களுக்கு வாழ்வில்லை,ஒளியில்லா உலகிற்கே அர்த்தமில்லை
சூரிய ஒளியின்றி தாவரங்களுக்கோ உணவில்லை
தீப ஒளியில் வட்டமிடும் பூச்சிகள், தீபாராதனையில் பக்தர்கள், ஒளியின் கவர்ச்சி எங்கில்லை?
தீபஒளியின் மகத்துவம்காட்டும் ஒலிம்பிக்தீபம்
தீமையகற்றி நன்மைகாட்டும் தீபாவளி அலங்காரதீபம்
பிதுர்கடன் தீர்த்தல் கடமையெனக்காட்டும் கார்த்திகைத்தீபம்
மாவீரர் போற்றித்தாயகம் மீட்போம் எனும்அஞ்சலித்தீபம்
தீபஒளியே நீடுவாழ்க! தமிழர்தம் நெஞ்சங்களில் என்றும் வாழ்க!
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
