புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

விக்கினேஸ்வரன். அர்ச்சனா.

எதிர்கால தலைமுறை
உமக்காக…
************
தாமரை இலை
நீர் போல்
உருண்டு திரிவது தான்
இவ் மாணவப் பருவம்.

நீர் தவறி குளத்தில்
விழுவதா?….. இல்லை.
இலையில் இருப்பதா என
சிந்திக்க வைக்கும்
பருவம் அது.

உமக்கான முடிவை
நீர் தான் எடுக்கலாம்.

ஆசானுடைய அறிவுரையில்
செல்ல வேண்டுமே தவிர;
முடிவை நீர் தான்
எடுக்க வேண்டும்.

யாரோ ஒருவருடைய
கட்டாயத்தில்
இயங்குவீராயின்
நீர் தழும்பிக் கொண்டே
தான் இருப்பீர்.

சிறுவர்களே உமக்கான
அத்திவாரத்தை
சரியாக போடுங்கள்.

கட்டுகள் வரிசையாக
வரும்.

நீர் நடந்துவரும்
பாதையில்
அணைகள் காணப்படும்.

தவறி விழுந்தால்
உமது
எதிர்காலம் இடம்மாறிவிடும்.

தாமரை இலையில்
நீர் இருக்குமானால்
எதிர்காலம்
உமக்கானதாக தித்திக்கும்.
——————-
வரிகள் விக்கினேஸ்வரன். அர்ச்சனா.
உடுப்புக்குளம்.முல்லைத்தீவு.

அறிமுகம் Jeya nadesan aunti.

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading