பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

விடியாத இரவொன்று

விடியாத இரவொன்று

விடியாத இரவொன்று விடைதேடி நிற்கிறது
முடியாத செயலதனை முடித்திடவே செய்கிறது
படியாத கல்வியினால் பயன்கூட இல்லையே
நடியாத நல்வாழ்வின் நல்லொளியும் பெருகிடுமே!

கடிகாரம் ஓடுகையில் காலமும் ஓடிடுமே
கண்போல காரியமும் கவனத்துடன் முடிந்திடுமே!
துடிப்போடு முயற்சியும் துளிர்விடுமே நாளை
தூண்டலுடன் முயல்வும் செய்திடும் வேளையிலே

விடியாத இரவென்று ஏதுமில்லை
விண்ணதிர ஒளியுமே தெரிந்திடும்
முடியாத முயற்சியும் முயன்றிட்டால்
முன்னேற்றம் துளிர்விடும் விடியலாய்

நகுலா சிவநாதன் 1753

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading